Kathir News
Begin typing your search above and press return to search.

சாவதே மேல்! குடும்ப வறுமையால் தி.மு.க கடை மட்ட தொண்டன் ரயிலில் பாய்ந்து உயிரை துறந்தார்!

சாவதே மேல்! குடும்ப வறுமையால் தி.மு.க கடை மட்ட தொண்டன் ரயிலில் பாய்ந்து உயிரை துறந்தார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 May 2023 2:57 AM GMT

பழனியில் ரயிலில் பாய்ந்து திமுக பிரமுகர் உயிரிழந்தார். குடும்ப வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பழனியை சேர்ந்தவர் ராஜா முகமது. மனைவி, மகளுடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாக ராஜாமுகமதின் மனைவி மற்றும் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதனால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மேலும் ராஜா முகமது பழனியில் உள்ள பள்ளிவாசலில் தற்காலிக பணியாளராக இருந்த நிலையில், அவரது வேலையும் போனதால் குடும்பம் வறுமையில் இருந்துவந்தது.

திமுகவின் தீவிர தொண்டராகவும், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளராக ராஜமுகமது இருந்துள்ளார். குடும்பத்தின் வறுமை காரணமாக மன உளைச்சலில் இருந்த ராஜா முகமது கோதைமங்கலம் ரயில்வே தண்டவாளத்தில் திருவனந்தபுரத்திலிருந்து மதுரைக்கு சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த ரயில்வே போலீசார் ராஜா முகமதின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலை குறித்து ராஜாமுகமது எழுதிய கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News