Kathir News
Begin typing your search above and press return to search.

நத்தம் புறம்போக்கு நிலத்தில் சர்ச்? அதிகாரிகளை சரிகட்டி நடந்த மோசடி - வெகுண்டு எழுந்த உள்ளூர் மக்கள்!

நத்தம் புறம்போக்கு நிலத்தில் சர்ச்? அதிகாரிகளை சரிகட்டி நடந்த மோசடி - வெகுண்டு எழுந்த உள்ளூர் மக்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 May 2023 3:10 AM GMT

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் சர்ச் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் தென்னிந்திய திருச்சபை நடவடிக்கைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் இளையாம்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

மொடக்குறிச்சி தாலுகா பூந்துறை சேமூர் கிராமத்தில் நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சி.எஸ்.ஐ. மற்றும் எஸ்.டி.ஏ. என்ற பெயர்களில் சர்ச் கட்டிஉள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புறம்போக்கு நிலத்தை மத ரீதியான காரணங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என 2006ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணை உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. வருவாய் துறை அதிகாரிகளிடம் செல்வாக்கை பயன்படுத்தி தங்கள் அனுபவத்தில் நிலம் இருப்பதாக ஆவணங்களில் பதிவிட்டுள்ளனர்.

கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.

திட்ட அனுமதி பெறாமல் பூமி பூஜை நடத்தி கட்டுமானம் மேற்கொண்டுள்ளனர்.மனு மீது உத்தரவு பிறப்பிக்க ஈரோடு வருவாய் கோட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.

பூந்துறை சேமூரில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் உட்பிரிவு ஏற்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேற்கொண்டு எந்த கட்டுமானமும் மேற்கொள்ள இரு கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.

என அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்தார்.

மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பதில் அளிக்கும்படி ஈரோடு கலெக்டருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 13க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தது.

Input From: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News