Kathir News
Begin typing your search above and press return to search.

இவர்களுக்கு விவசாயம் கேவலமாக தான் தெரியும்.. அண்ணாமலையின் ஸ்மார்ட் ரிப்ளை..

இவர்களுக்கு விவசாயம் கேவலமாக தான் தெரியும்.. அண்ணாமலையின் ஸ்மார்ட் ரிப்ளை..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 July 2023 3:00 AM GMT

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கூறும் பொழுது கீழ்க்கண்டவாறு பேசியிருக்கிறார். "கலைஞர் மட்டும் கவுண்டர்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து இருக்காவிட்டால் அண்ணாமலை ஐ.பி.எஸ். படித்து இருக்க முடியாது. ஆடுதான் மேய்த்து இருப்பார். எடப்பாடி பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார். வானதி சீனிவாசன் கூடை வேய்ந்து இருப்பார்" என்றுபேசியிருந்தார். இதற்கு தமிழக பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஊழல் செய்து மக்கள் பணத்தைத் திருடியவர்கள் ஜம்பமாக வலம் வரும்போது, ஆடு மேய்ப்பது, வெல்லமண்டி வைத்திருப்பது, கூடை பின்னுவது போன்ற விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆ.ராசாவுக்கு கேவலமான தொழில்களாகத்தான் தெரியும்.


குறிப்பாக இவர்களுக்கு விவசாயம் கேவலமான தொழிலாக தான் தோன்றும். ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இத்தகைய தொழில்களின் பின்னணியில் இருப்பவர்களினால் தான் தாங்கள் அதிகாரப்பதில் வந்திருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது" என்று தன்னுடைய பதிலை பதிவிட்டிருந்தார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News