Kathir News
Begin typing your search above and press return to search.

அறநிலையத்துறையை இப்படி பண்ணலாமா.. இந்து முன்னணி வைக்கும் குற்றச்சாட்டு..

அறநிலையத்துறையை இப்படி பண்ணலாமா.. இந்து முன்னணி வைக்கும் குற்றச்சாட்டு..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Aug 2023 3:39 AM GMT

கோவிலை காக்க வேண்டிய அறநிலையத்துறையை தற்பொழுது கோவிலின் சொத்துக்களை கொண்டாடும் வகையிலும் அவற்றை கொள்ளையடித்துக் கொண்டு செல்லும் வகையிலும் செயல்களை செய்து வருவதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு எதிராக செய்யும் நடவடிக்கைகளை இந்து முன்னணியினர் ஆங்காங்கே கண்டுபிடித்து உண்மைகளை மக்களுக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.


இந்த நிலையில் இது குறித்து இந்து முன்னணியினர் தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தள பக்கங்களில் இதுபற்றி பதிவிடும் பொழுது, "சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலை திறக்க அறநிலையத்துறை அதிகாரிகளே கள்ளச் சாவி தயாரிக்கும் அறங்கெட்ட செயல் அரங்கேறியுள்ளது.


கோயில் உண்டியல் சாவி தொலைந்து போனால் அதற்கென உள்ள சட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் உண்டியல் திருடனை போல அறநிலையத்துறை அதிகாரிகளே கள்ளச் சாவி தயாரித்து உண்டியலை திறந்துள்ளதை பார்க்கும் போது அறநிலையத்துறை என்பது கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்கும் துறையாக மாறியுள்ளதையே காட்டுகிறது" என்று கூறியிருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News