செங்கோட்டை அரசு பள்ளி சர்ச்சை!! தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை பரிந்துரை!!

By : Bharathi Latha
தென்காசியின் செங்கோட்டையில் உள்ள எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தன்னார்வலர் மாணவிகளிடம் மகளிர் உரிமைத் தொகை வழங்கியது குறித்து கேள்வி எழுப்பினார். அந்த திட்டம் சரி என்று ஒரு மாணவி மட்டுமே கையை உயர்த்தினார், மற்ற மாணவிகள் தவறு என்று கூறி கையை உயர்த்தினர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசின் திட்டத்துக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் ஜீவா, விடுப்பு எதுவும் எடுக்காமல் பள்ளிக்கு வராமல் இருந்ததாகவும், உரிய அலுவலர்களிடம் அனுமதி பெறாமல் நிகழ்ச்சியை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
