Kathir News
Begin typing your search above and press return to search.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 12 பேருக்கு பாகுபாடு பார்க்காமல் நிதியுதவி வழங்கிய ஸ்டெர்லைட் நிறுவனம்!

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 12 பேருக்கு பாகுபாடு பார்க்காமல் நிதியுதவி வழங்கிய ஸ்டெர்லைட் நிறுவனம்!

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2022 7:58 AM GMT

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 12 பேருக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களின் வாழ்வாதாரத்திற்கான கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது அதனை கட்டுப்படுத்த தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அதிகளவில் காயமடைந்தவர்களுக்கு உடலுறுப்பு பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக இயல்பாக வேலை செய்ய முடியாத அவர்கள் இயல்பு வாழ்வை இழந்தனர். பலரது உதவியை அவர்கள் நாடியுள்ளனர் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நாடியபொழுது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 12 பேருக்கு அந்நிறுவனம் நிதியுதவி வழங்கியது. இந்த நிதியுதவியை பெற்ற பயனாளிகள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து கொண்டனர். நிறுவனம் வழங்கிய நிதி தொகை அவர்களின் வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.

Source:

Image Courtesy: Hindustan Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News