Begin typing your search above and press return to search.
சென்னை மதரஸாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 13 குழந்தைகள் மீட்பு.!
By : Kathir Webdesk
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் மதரஸா செயல்படுகிறது. அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 13 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் தலைமையில் மதரசாவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விசாரணைக்கு பிறகு குழந்தைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த அந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு விதமான தழும்புகள் இருந்துள்ளது. அவை என்ன பதிப்பால் உருவானது என தெரியவில்லை.
மீட்கப்பட்ட குழந்தைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Input From: Polimer
Next Story