Kathir News
Begin typing your search above and press return to search.

கோவிலை கடையாக மாற்றிய கொடுமை : JSK கோபி பரபரப்பு குற்றச்சாட்டு

கோவிலை கடையாக மாற்றிய கொடுமை : JSK கோபி பரபரப்பு குற்றச்சாட்டு

ThangaveluBy : Thangavelu

  |  10 April 2022 1:45 PM GMT

சென்னை அடுத்துள்ள காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலில் விலை மதிக்க முடியாத சிலைகள் அனைத்தும் திருடு போயிருப்பதாக அகில உலக ஆன்மீக இந்துமத கட்சி தலைவர் ஜே.எஸ்.கோபி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சென்னை காஞ்சிபுரத்தில் உள்ளேன். ஒரு சிவன் கோயிலை எப்படி எல்லாம் ஆட்டையை போட்டு இருக்காங்கனு பாருங்க மக்களே என்று பேசிகின்றார். மேலும், பழங்கால விலை மதிக்கமுடியாத சிலைகள் அனைத்தும் இந்த கோயிலில் இருந்து திருடுப்பட்டுள்ளதாக அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள். அக்கோயிலை சிலர் கடையாகவும் மாற்றி பயன்படுத்தி வருகிறார்கள் எனவே இந்த கோயிலை மீட்டெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News