Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் தனியாக இருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் போக்சோவில் கைது!

கோவையில் தனியாக இருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் போக்சோவில் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  5 July 2022 8:21 AM GMT

கோவையில் தனியாக இருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கோவையில் 17 வயது சிறுமி தனது தங்கையுடன் பாட்டி வீட்டில் வசித்து வரும் நிலையில், இரண்டு சிறுமிகளையும் வீட்டில் விட்டு பாட்டி கடைக்கு சென்றுள்ளார். அப்போது இதனை அறிந்த மதபோதகர் ஸ்டீபன் ராஜ் கதவை திறந்து வீட்டில் நுழைந்துள்ளார். அப்போது சிறுமியின் தங்கையை ஒரு அறையில் வைத்து அடைத்து வைத்துவிட்டு, 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சிறுமி கூச்சலிட்டதால், அங்கிருந்து மதபோதகர் ஸ்டீபன் ராஜ் தப்பி ஓடிவிட்டார். இது பற்றி சிறுமியின் பாட்டி அளித்த புகாரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஸ்டீபன் ராஜை சிறையில் அடைத்தனர். இது போன்று தொடர்ந்து மதபோதகர் என்ற போர்வையில் சிறுமிகள் மற்றும் பெண்களிடம் அத்துமீறும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பது அனைவரின் விரும்பமும் ஆகும்.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News