மதுரையில் பிட் காயின் ஆசைகாட்டி 2 கோடி ரூபாய் சுருட்டிய இருதயராஜ்
By : Mohan Raj
மதுரையில் பிட் காயினில் முதலீடு செய்தால் அதிக பணம் ஈட்டலாம் என கூறி இருதயராஜ் என்பவர் ஏமாற்றியது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் அனுராதா, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிட் காயினில் முதலீடு செய்தால் கண்டிப்பாக இரண்டு மடங்கு அதிகமாக ஈட்டலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதை நம்பி முதலீடு செய்த நிலையில் துவக்கத்தில் அதற்குரிய பணத்தை இருதயராஜ் என்பவர் வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அனுராதா மேலும் தனக்கு தெரிந்தவர்களிடம் கூறிய நிலையில் இரண்டு ஆண்டுகளில் பலர் அதில் அதிகமாக முதலீடு செய்துள்ளனர்.
அந்த வகையில் நானும் இரண்டு ஆண்டுகளில் 484 பேர் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் அவரிடம் முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் முதல் இருதயராஜ் பணம் வழங்காததால் உடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக ஆட்சியரிடம் பணம் கொடுத்தவர்கள் புகார் அளித்துள்ளனர், மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Image Source - ABP Nadu