திருவள்ளூர்: 'தூய இருதய' பள்ளியின் +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் குவிப்பு
By : Dhivakar
திருவள்ளூர்: 'சேக்ரட் ஹார்ட்' என்ற அரசு உதவி பெறும் பள்ளியில், பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு சம்பவம், பூதாகரமாக வெடித்து பெரும் கலவரத்தில் முடிந்தது. கள்ளக்குறிச்சி சம்பவத்தின் தாக்கம் ஓயாத நிலையில்,
இன்று(24.7.2022) திருவள்ளூர் மாவட்டம்,கீழச்சேரியில் இயங்கி வரும் "சேக்ரட் ஹர்ட்" என்ற அரசு உதவி பெறும் பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் தற்கொலை குறித்து 'சேக்ரட் ஹார்ட்' பள்ளி நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் இறந்த மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனால் பதட்டம் ஏற்படும் சூழ்நிலை கருதி, போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.