Kathir News
Begin typing your search above and press return to search.

காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்டு உயிர் இழந்த 2 வயது சிறுமி.. 10 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை..

காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்டு உயிர் இழந்த 2 வயது சிறுமி.. 10 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Nov 2023 6:54 AM GMT

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரோலா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக இரண்டு வயது பெண் குழந்தை அனுமதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட இரண்டு வயது பெண் குழந்தைக்கு சிகிச்சை செய்வதற்காக 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும், ஆனால் அவர்களுடைய பெற்றோர் வசதி இல்லாத காரணத்தினால் தாங்கள் தங்கள் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார்கள்.

உடனே மருத்துவமனை நிர்வாகம் அந்த குழந்தை இறந்து விட்டதாக கூறியதாகவும் பெற்றோரில் மற்றும் உறவினர்கள் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவமனை நிர்வாகம் தான் தன்னுடைய குழந்தையை இத்தகைய நிலைக்கு ஆளாகியது என்று பெற்றோர்கள் தரப்பில் கதறுடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது.


தமிழகத்தில் சென்னையில் குரோம்பேட்டையில் அமைந்த தனியார் மருத்துவமனையில் இத்தகைய ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இரண்டு வயதான பெண் குழந்தையின் சிகிச்சைக்காக அதிக பணம் தனியார் கேட்டு இருப்பதும் குற்றச்சாட்டிற்கு உரியதாக பார்க்கப்படுகிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News