Kathir News
Begin typing your search above and press return to search.

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 தங்க கலசங்கள் திருட்டு!

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 தங்க கலசங்கள் திருட்டு!

ThangaveluBy : Thangavelu

  |  1 March 2022 4:36 AM GMT

விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விருதாம்பிகை அம்மன் சன்னதியில் அமைந்துள்ள மூலவர் கோபுரத்துக்கு மேல் இருக்கும் மூன்றடி உயரமுள்ள 3 கலசங்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த கோயில் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் திடீரென்று மூன்று கலசங்கள் திருடு போயுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Polimer

Image Courtesy: Tamilnadu Tourism

Next Story
கதிர் தொகுப்பு
Trending News