தமிழகத்தில் 307 ஏக்கர் நீர் நிலைகள் மாயம், செயற்கைகோள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! திராவிட மாடலின் புதிய சாதனை!
By : Thangavelu
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 307 ஏக்கர் அளவிலான ஏழு நீர் நிலைகள் முற்றிலும் தொலைந்து விட்டதாக செயற்கைகோள் மூலமாக உறுதி செய்யப்பட்டு மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நீர் நிலைகளில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் பற்றி செயற்கைகோள் மூலமாக இஸ்ரோ நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி 2006, 07, 2017, 18 என்று பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் இருக்கின்ற நீர் நிலைகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பன பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் கடந்த பிப்ரவரி 3ம் தேதி மத்திய அரசு இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இதில் அடங்கியுள்ள அறிக்கையின் படி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், நாடு முழுவதும் 2.31 லட்சம் நீர் நிலைகள் உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருபது வகைகளாக பட்டியல் இடப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 26 ஆயிரத்து 883 நீர் நிலைகள் இருப்பது உறுதியாகியது. அந்த ஆய்வின்படி தமிழகத்தில் 301 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏழு நீர் நிலைகள் முற்றிலும் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உயர் அதிகாரிகள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். விரைவில் இதற்கான முடிவுகள் தெரியவரும் என கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Dinamalar