Kathir News
Begin typing your search above and press return to search.

சாத்தானை விரட்ட கர்த்தரிடம் நித்திரையடைய 40 நாள் உணவின்றி இருந்த பெண்கள் மீட்பு!

சாத்தானை விரட்ட கர்த்தரிடம் நித்திரையடைய 40 நாள் உணவின்றி இருந்த பெண்கள் மீட்பு!

ThangaveluBy : Thangavelu

  |  12 April 2022 1:32 AM GMT

திருச்சி மாவட்டத்தில் சாத்தான் மற்றும் செய்வினையில் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்காகவும், கர்த்தரிடம் நித்திரையடைவதற்காக 40 நாட்களாக சாப்பிடாமல் வீட்டுக்குள்ளேயே இருந்த 2 பெண்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மேலமஞ்சம்பட்டி என்ற கிராமம். அந்த ஊரை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள் 57, மற்றும் அவரது அக்கா மகள் அந்தோணியம்மாள் 30 என்பரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர்களின் வீட்டில் இருந்து யாருமே வெளியில் வராமல் இருந்தனர். வீட்டின் பின்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மணப்பாறை போலீசார் ஆரோக்கியம்மாள் வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் எழுந்து உட்கார முடியாதவாறு ஆரோக்கியம்மாள் மற்றும் அந்தோணியம்மாள் தரையில் படுத்துக்கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியான தகவலை கூறினர்.

அதாவது மார்க்ரேட் அந்தோணியம்மாளின் தாய் சவரியம்மாளின் ஆவி, சைத்தான் வடிவில் வீட்டுக்குள் புகுந்துவிட்டதாக கூறினர். அது மட்டுமின்றி சிலர் செய்வினை வைத்துள்ளதாகவும், அதனை விரட்டியடிக்கவே கர்த்தரிடம் நித்திரையடைவதற்காக இருக்கின்றோம் எனக் கூறினர். இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Source, Image Courtesy: Dinakaran

Next Story
கதிர் தொகுப்பு
Trending News