Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா பரவும் வகையில் 400 பேருடன் ஜபம்: பாதிரியார் மீது வழக்குப்பதிவு!

கொரோனா பரவும் வகையில் 400 பேருடன் ஜபம்: பாதிரியார் மீது வழக்குப்பதிவு!

ThangaveluBy : Thangavelu

  |  17 Jan 2022 2:51 AM GMT

தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வழிபாட்டு தலங்களுக்கு வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுகின்ற வகையில் சென்னை, வண்ணாரப்பேட்டை ஜெ.பி.கோயில் தெருவில் உள்ள தேவாலயத்தின் 175வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. அப்போது சுமார் 400க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து தேவாலய போதகர் ரெவரன்ட் மார்ட்டின பிலீப் உள்ளிட்டவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Image Courtesy:The Hindu Business Line

Next Story
கதிர் தொகுப்பு
Trending News