தமிழகத்துக்கு அள்ளி வழங்கிய மத்திய அரசு - நேரடி சிறப்பு நடவடிக்கையால் 54.99 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
By : Muruganandham
இந்தியாவில் 6.51 கோடி நபர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, 130.9 கோடிக்கும் அதிகமான மனித நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போதைய 2021-22-ம் ஆண்டில் 25 லட்சத்துக்கும் அதிகமானச் சொத்துகள் இத்திட்டத்தின் கீழ் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. 2021 ஜூலை 23 வரை, 2021-22-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 54.99 லட்சம் நபர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் பணியாளர் பதிவேடு நிறைவு செய்யப்பட்ட 15 நாட்களில் சுமார் 99.5 சதவீதம் நிதி பரிவர்த்தனை உத்தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பணியாளர்களுக்கான ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்குவதற்காக Ne-FMS-ஐ அரசு செயல்படுத்தியுள்ளது. இந்தக் கட்டண முறையை 25 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் இதுவரை செயல்படுத்தி உள்ளன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ், 2018-19-ம் ஆண்டு ரூ 4951.66 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 5447.80 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 8941.26 கோடியும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஆண்டில் ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு ரூபாய் 73 ஆயிரம் கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2020-21-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 11,500 கோடி அதிகமாகும்.