Kathir News
Begin typing your search above and press return to search.

கிருஷ்ணகிரி : 6 சாமி சிலைகள் மாயம், திருத்தொண்டர் சபை நிறுவன தலைவர் காவல் நிலையத்தில் புகார்!

கெலமங்கலத்தில் உள்ள கோயில்களில் திருத்தொண்டர் சபையின் நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விலை மதிப்பில்லாத ஆறு கற்சிலைகள் மாயமாகியுள்ளதை கண்டுப்பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி : 6 சாமி சிலைகள் மாயம், திருத்தொண்டர் சபை நிறுவன தலைவர் காவல் நிலையத்தில் புகார்!

ThangaveluBy : Thangavelu

  |  28 Dec 2021 3:00 PM GMT

கிருஷ்ணகிரி அருகே கெலமங்கலத்தில் உள்ள கோயில்களில் திருத்தொண்டர் சபையின் நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விலை மதிப்பில்லாத ஆறு கற்சிலைகள் மாயமாகியுள்ளதை கண்டுப்பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ளது கெலமங்கலம். இந்த ஊர் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதியை நிறைந்த இடமாகும். இங்கு பழமை வாய்ந்த கோயில்கள் ஏராளமாக உள்ளது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறையினர் சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு.

இந்நிலையில், கெலமங்கலத்திலிருந்து தேன்கனிக்கோட்டை செல்கின்ற வழியில் மிகவும் பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்த கோயில் தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது. இதனை திருத்தொண்டர் சபை நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று (டிசம்பர் 27) ஆய்வு மேற்கொண்டார். அப்போது விலை மதிப்பில்லாத ஆறு சாமி கற்சிலைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அதிகாரிகளோ ஒகேனக்கல் ஆற்றில் சிலைகளை விட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கெலமங்கலம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பகுதியில் விசாரணை நடத்தினார். அப்போது கெலமங்கலம் ஜீவா நகர் பகுதியில் ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமாக 8 ஏக்கர் நிலம் உள்ளது. அதனை ஆய்வு செய்தபோது உரிய அனுமதி பெறாமல் வீடுகள் கட்டப்பட்டு குடியிருந்து வருகின்றனர். அதற்கான வாடகை பணமும் இந்து அறநிலையத்துறைக்கு சம்பந்தபட்டவர்கள் வழங்காமல் இருப்பதையும் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள கோயில் மற்றும் அதற்கு சம்பந்தபட்ட நிலங்களில் சரியான வாடகைப் பணம் கோயிலுக்கு சென்று சேரவில்லை. முறையான பூஜைகள் கூட செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது, தமிழகத்திலேயே ஓசூர் மற்றும் கெலமங்கலம் பகுதிகளில் விலை மதிப்புள்ள கோயில் நிலங்கள் உள்ளது. அதனை முறையாக பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy:Pinterest

Next Story
கதிர் தொகுப்பு
Trending News