Kathir News
Begin typing your search above and press return to search.

11ம் வகுப்பு மாணவியை சீரழித்த 3 பேர் - தொடரும் சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள்

11ம் வகுப்பு மாணவியை சீரழித்த 3 பேர் - தொடரும் சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள்

ThangaveluBy : Thangavelu

  |  24 April 2022 1:34 PM GMT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பள்ளியில் படித்து வந்த 11ம் வகுப்பு மாணவியின் பலாத்கார வீடியோவை காண்பித்து மூன்று பேர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவி திடீரென்று மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் உடனடியாக தச்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டர் மாணவி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார் என்று கூறியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து மாணவியை திருவண்ணாமலை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தினர். அப்போது வாலிபர் ஒருவர் மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அது மட்டுமின்றி மாணவியுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ள வீடியோவை தன்னுடைய நண்பர்களிடம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் அந்த மூன்று பேரும் மாணவியிடம் வீடியோவை காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பள்ளியில் படித்து வரும் மாணவிக்கு 4 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவத்தை சாதாரணமாக கடந்தவிட முடியாது. எனவே குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை இந்த அரசு பெற்றுத்தர வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பெண் பிள்ளைகளை பெற்ற அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: Education Week

Next Story
கதிர் தொகுப்பு
Trending News