Kathir News
Begin typing your search above and press return to search.

121 சவரன் நகை கொள்ளை - காவல்துறை நடவடிக்கை என்ன?

121 சவரன் நகை கொள்ளை - காவல்துறை நடவடிக்கை என்ன?

DhivakarBy : Dhivakar

  |  30 April 2022 10:30 AM GMT

புதுக்கோட்டை : 120 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், கொள்ளையர்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொலை கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்தேறி வருகிறது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.


இதற்கு வலுசேர்க்கும் விதமாக, புதுக்கோட்டை பெரியார் நகரில் வசித்து வந்த மனோன்மணி என்பவர், தன் மகளின் திருமணத்திற்காக கடந்த மாதம் தன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரைக்குடி சென்றுள்ளார்.


இச்செய்தி அறிந்த கொள்ளையர்கள், மனோன்மணியின் வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டில் வைத்திருந்த 121 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.


மகளின் திருமணத்தை முடித்துவிட்டு, மனோன்மணி புதுக்கோட்டையில் உள்ள தன் வீட்டிற்கு திரும்பிய போதுதான் தெரிந்தது, தன் வீட்டில் இருந்த 121 சவரன் தங்கநகை கொள்ளை அடிக்கப்பட்டது என்று.


இதனை தொடர்ந்து மனோன்மணி, காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளிக்கவே, அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறை, 3 கொள்ளையர்களை சிறைபிடித்தனர். அவர்களிடமிருந்து 121 சவரன் தங்க நகைகளும் மீட்டனர்.

Polimer TV

Next Story
கதிர் தொகுப்பு
Trending News