Kathir News
Begin typing your search above and press return to search.

15 ஆண்டுகளாக விநாயகர் கோயிலை மது அருந்துவதற்கு பயன்படுத்தும் சமூக விரோதிகள் !

அருப்புக்கோட்டையில் சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான தெப்பகுளத்தின் அருகாமையில் சிறப்பு வாய்ந்த விநாயகர் கோயில் கடந்த 15 ஆண்டுகளாக பூட்டிக்கிடப்பதாக கூறப்படுகிறது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறையும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

15 ஆண்டுகளாக விநாயகர் கோயிலை மது அருந்துவதற்கு பயன்படுத்தும் சமூக விரோதிகள் !

ThangaveluBy : Thangavelu

  |  13 Dec 2021 5:19 AM GMT

அருப்புக்கோட்டையில் சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான தெப்பகுளத்தின் அருகாமையில் சிறப்பு வாய்ந்த விநாயகர் கோயில் கடந்த 15 ஆண்டுகளாக பூட்டிக்கிடப்பதாக கூறப்படுகிறது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறையும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 'சூரிய புஷ்கரணி' தெப்பக்குளம் அருகாமையில் நூற்றாண்டை கடந்த புகழ்வாய்ந்த வினை தீர்க்கும் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் பூட்டியே கிடக்கிறது. அது மட்டுமின்றி சமூக விரோதிகளுக்கு புகழிடமாக மாறிவிட்டது.

இதனை பார்க்கும் இந்துக்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர். தீராத நோய்கள் அனைத்தும் சூரிய புஷ்கரணி தெப்பக்குளத்தில் நீராடிவிட்டு விநாயகரை வழிபட்டால் அனைத்தும் பறந்து ஓடிவிடும் என்ற ஐதீகம் இருப்பதாக இந்துக்கள் கூறுகின்றனர். இது போன்ற புகழ்வாய்ந்த கோயிலில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதே என்று இந்துக்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்காமல் விட்டதால் 15 ஆண்டுகளாக குடிமகன்கள் பாராக பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சரிசெய்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News