Kathir News
Begin typing your search above and press return to search.

பேட்டரி இல்லாமல் 1,500 அரசு பேருந்துகள் முடக்கம்!

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான பணம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்க முடியாமலும் பேருந்துகளை பராமரிப்பதற்கு நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

பேட்டரி இல்லாமல் 1,500 அரசு பேருந்துகள் முடக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  30 Nov 2021 4:44 AM GMT

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான பணம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்க முடியாமலும் பேருந்துகளை பராமரிப்பதற்கு நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

அதிலும் உதிரி பாகங்கள் வாங்குவதற்கு பணம் இல்லாமல் பழுதடைந்த பேருந்துகளில் இருந்து மாற்றப்பட்டும் வருகிறது. அதே நேரத்தில் காலாவதியான பேட்டரிகளை மாற்ற முடியாது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பணிமனையிலும், ஒன்று அல்லது இரண்டு பேருந்துகளில் பேட்டரி இல்லாமல் மொத்தம் 1500 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற பேருந்துகளை சரி செய்வதற்கும் 100 சதவீதம் அளவிற்கு பேருந்துகளை இயக்குவதற்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என ஊழியர்கள் திமுக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Source: Dinamalar

Image Courtesy:The News Minute


Next Story
கதிர் தொகுப்பு
Trending News