Kathir News
Begin typing your search above and press return to search.

உயர் அதிகாரிகள் தடை - முருகன் கோவில் காவடி மூன்று மணி நேரம் தாமதம்?

முருகன் கோவிலுக்கு மூன்று மணி நேரம் தாமதமாக காவடி எடுத்த பக்தர்கள்.

உயர் அதிகாரிகள் தடை - முருகன் கோவில் காவடி மூன்று மணி நேரம் தாமதம்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Dec 2022 5:14 AM GMT

முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து செல்ல போலீசாருக்கு திடீர் தடை விதிக்கப்பட்டதால் போலீஸ் நிலையத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர். பின்னர் 3 மணி நேரத்திற்கு பிறகு தாமதமானது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமர கோவில் பிரசித்தி பெற்ற வெளி மலை முருகன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பக்தர்கள் தினமும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம். அங்கு காவடி எடுத்துச் செல்வதும் மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோல திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தில் இருந்த நாட்டில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியதும், மக்கள் பசி என்று வாழ வேண்டியதும், சண்டை சச்சரவுகள் இன்றி நிம்மதியுடன் வாழவும் பொதுமக்கள் மற்றும் போலீஸ் நிலையம் சார்பில் முருகன் கோவிலுக்கு அதிகாரிகள் காவடி எடுத்து செல்வார்கள்.


இந்த பாரம்பரிய மரபு தோன்றுதொட்டு அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் போலீஸ் நிலையத்தில் இருந்து காவடி எடுத்து செல்லக்கூடாது என்று உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவாக கூறப்படுகிறது. இந்த உத்தரவின் காரணமாக நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையத்தில் காவடி எடுக்க பக்தர்களால் பூக்கள் அலங்கரிக்கும் பணி நடைபெற்று நடைபெறவில்லை. அதே சமயம் இந்து அமைப்பினருக்கு தெரிய வந்தது உடனே அவர்கள் நள்ளிரவில் முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.


போலீஸ் நிலையத்தில் காவடி எடுத்து செல்லக்கூடாது என்றும், பொது இடமான போலீஸ் நிலையம் அனைத்து மதத்தினரும் பயன்படுத்தக்கூடிய ஒரு இடம் என்பதால் எடுத்துச் சொல்லக்கூடாது என்று போராட்டத்தை ஈடுபட்டார்கள். இதனுடைய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வருகை தந்து பிரச்சனையை தீர்த்து வைத்தார். பிறகு காவடி எடுப்பதற்கு காலை 11:00 மணிக்கு போலீஸ் நிலையத்திலிருந்து காவேரி புறப்பட்டது 3 மணி நேரம் தாமதமாகவே சென்றது.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News