Kathir News
Begin typing your search above and press return to search.

5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வருகை.!

தமிழகத்துக்காக 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று விமானம் மூலமாக சென்னைக்கு வருகிறது.

5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வருகை.!

ThangaveluBy : Thangavelu

  |  20 July 2021 3:40 AM GMT

தமிழகத்துக்காக 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று விமானம் மூலமாக சென்னைக்கு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசிகள் வேகமாக போடப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு தினந்தோறும் தேவைக்கேற்ப தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.


மத்திய அரசு இதுவரை தமிழகத்துக்கு 1,80,32,170 தடுப்பூசிகள் அளித்துள்ளது. அதில் 1,80,03,777 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது. 3,42,820 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இருந்தபோதிலும் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடுப்பூசி முகாம் இயங்காமல் உள்ளது.


இந்நிலையில், தமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விமானம் மூலமாக சென்னை வருகிறது. ஏற்கனவே கடந்த 17ம் தேதி 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தடுப்பூசிகளும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News