Kathir News
Begin typing your search above and press return to search.

விழுப்புரத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை.!

விழுப்புரத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை.!

விழுப்புரத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Dec 2020 1:01 PM GMT

விழுப்புரம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ளது வளவனூர் புதுப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தையுடன் வசித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கின்போது வேலையில்லாததால், கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார். இதனையடுத்து வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடனை கொடுத்தவர்கள் வந்து கடன் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா அனுப்பி வைத்தனர்.

மேலும், இது பற்றி சந்தேக மரணமாக பதிவு செய்த போலீசார் கடன் கொடுத்தவர்களின் பெயர் பட்டியலில் யாருக்காவது தெரிந்தால் தகவல் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை செய்த சம்பவம் அக்கிராமத்தை மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News