Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் என்.ஐ.ஏ., அதிரடி சோதனை: 57 செல்போன்கள், போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல்!

தமிழகத்தில் என்.ஐ.ஏ., அதிரடி சோதனை: 57 செல்போன்கள், போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல்!

ThangaveluBy : Thangavelu

  |  20 July 2022 12:09 PM GMT

தமிழகத்தில் சென்னை உட்பட 25 இடங்களில் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (ஜூலை 20) காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி கேரள மாநிலம், விழிஞம் துறைமுகம் அருகாமையில் 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் 25 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், கேம்ப் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை என 9 இடங்களிலும், திருச்சி மாவட்டத்தில் 11 இடங்களிலும், திருப்பத்தூரில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள், 2 பென் ட்ரைவ், 2 லேப்டாப்கள், வைஃபை மோடங்கள் மற்றும் இலங்கைக்கான பாஸ்போராட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த திடீர் சோதனை தமிழகத்தில் புயலை கிளப்பியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News