Kathir News
Begin typing your search above and press return to search.

டிசம்பர் 28க்குள் 80 சதவீதம் புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.. தெற்கு ரயில்வே.!

டிசம்பர் 28க்குள் 80 சதவீதம் புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.. தெற்கு ரயில்வே.!

டிசம்பர் 28க்குள் 80 சதவீதம் புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.. தெற்கு ரயில்வே.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Dec 2020 4:26 PM GMT

சென்னையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் படிப்படியாக புறநகர் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோயின் போது முடக்கப்பட்டிருந்த சென்னை புறநகர் ரயில் சேவை, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ஓடத் துவங்கியது. ஆரம்பக்கட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது அனைத்து மக்களும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுமக்களுக்கு Peak Hours என்று சொல்லப்படும் காலை 7 முதல் 9.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், வருகின்ற டிசம்பர் 28ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில் சேவை 80 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News