Kathir News
Begin typing your search above and press return to search.

நெல்லை அருகே காட்டாற்று வெள்ளத்தில சிக்கிய 9 பேரை மீட்ட தீயணைப்புத்துறை!

நெல்லை மாவட்டம், பணகுடியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 9 பேரை கயிறு மூலம் பத்திரமாக தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

நெல்லை அருகே காட்டாற்று வெள்ளத்தில சிக்கிய 9 பேரை மீட்ட தீயணைப்புத்துறை!

ThangaveluBy : Thangavelu

  |  12 Nov 2021 12:41 PM GMT

நெல்லை மாவட்டம், பணகுடியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 9 பேரை கயிறு மூலம் பத்திரமாக தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆலந்துறை ஆற்றில் விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் வழக்கம் போன்று வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் ஆற்றை கடக்க முடியாமல் விவசாயிகள் பறிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறையினர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை கயிறு மூலமாகவும், மிதவை உபகரணங்களை கொண்டு பத்திரமாக 9 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அனைவரையும் பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்த தீயணைப்புத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News