மன வளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிருஸ்துவ பாதிரியார்
விருதுநகர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
By : Mohan Raj
விருதுநகர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி சேர்ந்தவர் ஜோசப் ராஜா, 49 வயதான இவர் அதே பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருந்து வந்துள்ளார்.
இந்த கிறிஸ்தவ பாதிரியார் அங்கு மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் தாயார் அதிர்ச்சி அடைந்தார் மேலும் பாதிரியார் ஜோசப் பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த சிறுமி கூறியதை தொடர்ந்து அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து பாதிரியார் ஜோசப் ராஜாவை கைது செய்தனர்.