Kathir News
Begin typing your search above and press return to search.

5 பைசாவிற்கு ஒரு கிலோ கோழிக்கறி.. புதிய கடையில் குவிந்த மக்கள் கூட்டம்.!

5 பைசாவிற்கு ஒரு கிலோ கோழிக்கறி.. புதிய கடையில் குவிந்த மக்கள் கூட்டம்.!

5 பைசாவிற்கு ஒரு கிலோ கோழிக்கறி.. புதிய கடையில் குவிந்த மக்கள் கூட்டம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2020 11:36 AM GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதியதாக கோழி கறக்கடை திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழா சலுகையாக 5 பைசாவிற்கு ஒரு கிலோ கோழிக்கறி விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நம்பி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.


அனைவருமே கைகளில் 5 பைசா நாணயத்துடன் குவிந்துள்ளனர். இதனால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.


இது பற்றி அந்த கடையின் உரிமையாளர் இது பற்றி கூறியதாவது: பழைய நாணயங்களை பாதுகாக்கும் முயற்சியாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலரிடம் மட்டுமே 5 பைசா நாணயம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்டவர்களிடம் நாணயம் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த செயல் இன்னும் மக்கள் பழமை மாறாமல் உள்ளதை காட்டுவதாக கடையின் உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News