இரு உயிரை பறித்த ஒருதலை காதல் - ஏற்கனவே சதீஷ் மீது வழக்கு உள்ளதாக தகவல்
கல்லூரி மாணவி ஒருவரை ரயில் முன் தள்ளி கொலை செய்த கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளான்.
By : Mohan Raj
கல்லூரி மாணவி ஒருவரை ரயில் முன் தள்ளி கொலை செய்த கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளான்.
பரங்கிமலை மின்சார அருகில் இருந்து இளைஞன் ஒருவன் மாணவியை தள்ளி விட்டதில் கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சதீஷ் என்ற இளைஞர் மனதில் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நான்கு தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் சுற்றித்திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் என்ற கைது செய்தனர். மேலும் இன்று மாணவியின் தந்தை மாணவி இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அந்த இளைஞன் சதீஷ் மீது காவல்துறை வழக்கு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.