Kathir News
Begin typing your search above and press return to search.

பல தடைகளை உடைத்து, சிறையிலிருக்கும் ABVP மாணவர்களை சந்தித்த இந்து முன்னணி!

பல தடைகளை உடைத்து, சிறையிலிருக்கும் ABVP மாணவர்களை சந்தித்த இந்து முன்னணி!

DhivakarBy : Dhivakar

  |  19 Feb 2022 2:28 PM GMT

தஞ்சை மாணவி இறப்புக்கு நீதி வேண்டி, முதல்வரின் இல்லத்தை முற்றகையிட்டதால் கைது செய்யப்பட்ட ABVP அமைப்பினரை, இந்து முன்னணி நிர்வாகிகள் சிறையில் சந்தித்தனர்.


கிறிஸ்தவ பள்ளியில் நடந்த கட்டாய மதமாற்றத்தால் தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது. இச்சம்பவத்திற்கு நீதி வேண்டியும் சி.பி.ஐ விசாரணையில் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்" என்பதற்காக ABVP மாணவ அமைப்பினர் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதனால் ABVP தேசிய பொதுச் செயலாளர் நிதி திருப்பாதி மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழக காவல்துறை அராஜக போக்குடன் கைதுசெய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது.

தி.மு.க'வின் இச்செயலால் நாடு முழுவதும் தி.மு.க'விற்கு எதிராக கண்டனக் குரல் எழும்பி வருகிறது.

இந்நிலையில் கைதான மாணவர்களை, இன்று இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் திரு பரமேஸ்வரன் மற்றும் மாநில செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் சந்தித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News