Kathir News
Begin typing your search above and press return to search.

அக்னிபத் திட்டம் தேச துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டது - பளிச் என கூறிய இயக்குநர் பேரரசு

அக்னிபத் திட்டம் தேச துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டது - பளிச் என கூறிய இயக்குநர் பேரரசு

ThangaveluBy : Thangavelu

  |  22 Jun 2022 6:02 AM GMT

ரயிலை கொளுத்துகின்ற அளவுக்கு இளைஞர்களுக்கு தைரியம் எங்கிருந்து வருகிறது. பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள்தான் என்று இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்படி பா.ஜ.க. சார்பாக யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல திரைப்பட இயக்குநர் பேரரசு கலந்து கொண்டு யோகா செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியா என்பது பொதுவானது. இதில் ஒரு கட்சி ஆளும், நாளை வேறு ஒரு கட்சி ஆளும். கட்சியை விமர்சனம் செய்யலாம் அல்லது கருத்துக்களை கூறலாம். ஆனால் இந்திய நாட்டிற்கு எதிரான கருத்துக்களை ஒருபோதும் கூறக்கூடாது.

மேலும், அக்னிபத் திட்டம் என்பது மதம் சார்ந்த திட்டமோ அல்லது கட்சி சார்ந்த திட்டமோ கிடையாது. இது இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட திட்டமாகும். எனவே எந்த திட்டம் கொண்டு வந்தாலும் தீயசக்தி கும்பலை பிரதமர் மோடி களை எடுக்க வேண்டும். மேலும், இளைஞர்கள் ரயிலை கொளுத்தும் அளவுக்கு தைரியம் எங்கிருந்து வருகிறது. அவர்கள் பின்னாளில் இருந்து இயக்கும் நபர்கள் அனைவரையும் கண்டறிந்து தண்டிக்க வேண்டும். இது போன்றவர்களை ராணுவத்தில் எப்படி சேர்ப்பது. இவர்கள் எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள். என்னை பொறுத்தமட்டில் பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்கள் யாராக இருப்பின் அவர்கள் தேசத் துரோகிகள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News