Kathir News
Begin typing your search above and press return to search.

அக்னி வீரர் பணிக்கான ஆள்சேர்ப்புக்கு நுழைவு தேர்வு கட்டாயம்: வெளிப்படையாக நடக்கும் முறை!

அக்னி வீரர் ஆள்சேர்ப்புக்கான பொது நுழைவு தேர்வு வெளிப்படையான முறையில் நடக்கும்.

அக்னி வீரர் பணிக்கான ஆள்சேர்ப்புக்கு நுழைவு தேர்வு கட்டாயம்: வெளிப்படையாக நடக்கும் முறை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Feb 2023 2:45 AM GMT

ராணுவத்தில் அக்னி வீரர் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது. குறிப்பாக இதற்காக கடந்த 16ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 15 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை ஆன்லைன் பொது நுழைவு தேர்வு முதலில் நடத்தப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட எனவும், ராணுவம் அறிவித்து இருக்கிறது. வருகின்ற 17ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் 180 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


இதற்காக மாணவர்கள் விரும்பும் ஐந்து மையங்களில் ஒன்று ஒதுக்கப்படும் என்று ராணுவம் கூறியிருக்கிறது. இந்த தேர்வு குறித்து ராணுவ ஆட்சி இருப்பு இயக்குனர் கூறுகையில், ஆள் சேர்ப்பு நடைமுறைகள் முதல் படி பொது நுழைவு தேர்வாகும். ஆனால் தேர்வுக்கான பாடத்திட்டத்திலோ அல்லது தீர்வு முறையிலோ எந்தவிதமான மாற்றமும் இல்லை. இதன் முந்தைய தேர்வின் ஆன்லைன் பதிப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.


ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் பொது நுழைவு தீர்வு நடத்துவதால் ஆள் சேர்ப்பு முகாம்களில் நீண்ட வரிசை குறையும் என்று தெரிவித்தார். ராணுவ அதிகாரி இதை சிறப்பாக நிர்வகிக்க ராணுவத்திற்கு உதவும் என்றும் கூறியிருக்கிறார். வெளிப்படையாக விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பின் அடிப்படையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: Hindu News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News