Kathir News
Begin typing your search above and press return to search.

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை ரத்து செய்: தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு?

தி.மு.க அரசு அ.தி.மு.க மீது போட்ட பொய்யான வழக்கை ரத்து செய்யப்பட விட்டால் அ.தி.மு.க தொண்டர்கள் மனித வெடிகுண்டு ஆக மாறுவார்கள் என முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு.

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை ரத்து செய்: தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 March 2023 3:41 AM GMT

அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 11ம் தேதி சிவகங்கை நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்தார். அப்பொழுது கூட்டத்திற்கு வருவதற்கு முன் அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை வந்து இறங்கினார். விமானத்திலிருந்து கீழே இறங்கி பஸ் மூலமாக விமான நிலையத்திற்கு வந்தார். அப்பொழுது பஸ்ஸில் உடன் பயணம் செய்த அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியை சேர்ந்த ராஜேஷ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து தன்னுடைய செல்போன் மூலமாக வீடியோ எடுத்து அவரை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதை அறிந்த பழனிசாமியின் பாதுகாவலர்கள் செல்போனை தட்டி விட்டார்கள்.


இந்த ஒரு சம்பவம் தொடர்பாக அவர் மீது சிலர் வழக்கு பதிவு செய்தனர். தி.மு.க அரசை கண்டித்தும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் பெரும்பாலான அ.தி.மு.கவினர் கருப்பு சட்டையை அணிந்து வந்து இருந்தார்கள். இந்த போராட்டத்தின்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கூறும் பொழுது, தி.மு.க அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். பொய்யான வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். எனவே எதிர்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒருவர் அவதூராக பேசுகிறார்.


ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்த தி.மு.க அரசு எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறது. இந்த வழக்கை அவர்கள் வாபஸ் வாங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார். குறிப்பாக அவர் கூறுகையில், சர்வாதிகாரிகளாக நீடிக்கும் தி.மு.க ஆட்சியின் காரணமாக அ.தி.மு.க தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறி அ.தி.மு.கவிற்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று பரபரப்பாக பேசி இருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News