Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு! அவசர அவசரமாக தரையிறக்கம்!

சென்னையில் இருந்து அந்தமான் தீவுக்கு இன்று காலை 8.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் 177 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 123 பேர் இருந்துள்ளனர்.

சென்னையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு! அவசர அவசரமாக தரையிறக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  24 Sep 2021 11:23 AM GMT

சென்னையில் இருந்து அந்தமான் தீவுக்கு இன்று காலை 8.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் 177 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 123 பேர் இருந்துள்ளனர்.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 1 மணி நேரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி சாதுர்யமாக கண்டுப்பிடித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி பத்திரமாக தரையிறக்கியுள்ளார் விமானி.

இந்த சம்பவத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு மாற்று விமானம் மூலமாக அந்தமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News