Kathir News
Begin typing your search above and press return to search.

ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் படுகொலை பற்றி பேசிய இந்து அமைப்பு தலைவர் திடீர் கைது!

ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் படுகொலை பற்றி பேசிய இந்து அமைப்பு தலைவர் திடீர் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  24 April 2022 2:53 AM GMT

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே கோயில் திருவிழாவில் கடந்த 17ம் தேதி பங்கேற்றார். அங்கு கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார்.

இதனால் தமிழகத்தில் அமைதியை சீர்குலைத்து, மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக, சிறப்பு எஸ்.ஐ. ரத்தினதாஸ் அளித்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஈத்தாமொழியில் உள்ள பாலசுப்பிரமணியம் இல்லத்தில் அவரை போலீசார் கைது செய்தனர். இதனை அறிந்த தொண்டர்கள் போலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News