Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் கொள்கையால் தமிழகம் நோக்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள்! சென்னையில் அமெரிக்க நிறுவனம் ரூ.31,000 கோடி முதலீடு செய்ய உள்ளது!

American company to invest Rs 31,000 crore in Chennai firm

மத்திய அரசின் கொள்கையால் தமிழகம் நோக்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள்! சென்னையில் அமெரிக்க நிறுவனம் ரூ.31,000 கோடி முதலீடு செய்ய உள்ளது!

MuruganandhamBy : Muruganandham

  |  2 Dec 2021 9:04 AM GMT

சென்னையை தலைமையிடமாக கொண்ட ராம்சரண் கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 4.14 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 31,000 கோடி) முதலீடு செய்து, 46 சதவீத பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த டிஎஃப்சிசி இன்டர்நேஷனல் வாங்க உள்ளது.

இந்திய இரசாயனத் துறையில் மிகப்பெரிய நிதியுதவியாகக் கருதப்படும் TFCC இன் முதலீடு, சோடியம் சிலிக்கேட்டால் செய்யப்பட்ட அதிக சேமிப்புத் திறன் கொண்ட ஆற்றல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சாதனங்களுக்கான உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். இந்த முதலீடு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான காலக்கட்டத்தில் செய்யப்படும். இதற்கான முதல் சுற்று ஜனவரி 2022 க்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

ராம்சரண் பயன்படுத்திய தொழில்நுட்பம் பூஜ்ஜிய நச்சு வெளியேற்றத்தை அனுமதிக்கிறது. மேலும் அனைத்து வகையான பிரிக்கப்படாத கழிவுகளையும் ஆற்றலாக மாற்றுகிறது. சுற்றுச்சூழலுக்கு எந்த கழிவுகளையும் வெளியேற்றுவது இல்லை. இது உலகளவில் முதல் வகையாகவும் பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது.

சென்னையில் உள்ள நிறுவனங்களின் பதிவாளர் அறிக்கைபடி, TFCC இன்டர்நேஷனல் மற்றும் ராம்சரண் கம்பெனியின் இந்தியப் பிரிவு இரண்டும் அண்ணாசாலையில் உள்ள ரஹேஜா டவரில் ஒரே பதிவு செய்யப்பட்ட முகவரியைப் பகிர்ந்து கொள்கின்றன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News