Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை மூடிய தி.மு.க. அரசு!

தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் டவுன் மருத்துவமனைக்கு செல்லாமல் காய்ச்சல், சளி, உள்ளிட்டவைகளுக்கு மினி கிளினிக் மூலமாக சிகிச்சைகளை மேற்கொள்ள ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர் என நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை மூடிய தி.மு.க. அரசு!

ThangaveluBy : Thangavelu

  |  4 Jan 2022 7:16 AM GMT

தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் டவுன் மருத்துவமனைக்கு செல்லாமல் காய்ச்சல், சளி, உள்ளிட்டவைகளுக்கு மினி கிளினிக் மூலமாக சிகிச்சைகளை மேற்கொள்ள ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர் என நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த கிளினிக்குகள் அதிமுக ஆட்சியின் போது சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் திமுக அரசு அமைந்த பின்னர் அம்மா என்ற பெயர் இருக்கும் காரணத்தினால் என்னவோ அம்மா மினி கிளினிக்கை மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு அதிமுக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது: அம்மா மினி கிளினிக் ஓராண்டு மட்டுமே செயல்படும்படி கடந்த அதிமுக ஆட்சி அமைத்திருந்தது. தற்போது இதன் தேவை ஏற்படவில்லை. இதனால் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகிறது என்றார். முன்னதாக சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy:The New Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News