நாகையில் அம்மா மினி கிளீனிக் சூறையாடல்: எஸ்.பி.வேலுமணி கண்டனம்.!
நாகையில் அம்மா மினி கிளீனிக் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

By : Thangavelu
நாகையில் அம்மா மினி கிளீனிக் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, முகப்பேரு 92வது வார்டு அம்மா உணவகத்தை நேற்று திமுகவினர் சூறையாடினர். இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த காலங்களை போன்று மீண்டும் திமுக அட்டூழியங்களை செய்ய ஆரம்பித்து விட்டது என்றே தோன்றுகிறது.
அம்மா உணவகம் சேதப்படுத்தியதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்து முடியும் பட்சத்தில் நேற்று இரவு நாகை மாவட்டம், அவரிக்காட்டில் செயல்பட்டு வந்த அம்மா மினி கிளினிக்கும் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு திமுகதான் காரணம் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "கொரோனா பேரிடர் காலத்தில் எளிய மக்களுக்கும் சிறந்த மருத்துவம் உடனடியாக கிடைக்க வேண்டும் எனும் உன்னத நோக்கோடு துவங்கப்பட்ட அம்மா மினி கிளீனிக் நாகை மாவட்டம் அவரிக்காட்டில் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
