Kathir News
Begin typing your search above and press return to search.

டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை வேண்டும்: எச்சரிக்கைவிடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

டெங்கு காய்ச்சலைக் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை வேண்டும்: எச்சரிக்கைவிடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

ThangaveluBy : Thangavelu

  |  5 Oct 2021 7:05 AM GMT

டெங்கு காய்ச்சலைக் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நடப்பாண்டில் சுமார் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் நன்னீரில்தான் உருவாகின்றன. அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் பணியாகும்.


டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும்போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: Anbumani Ramadoss

Image Courtesy:Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News