Kathir News
Begin typing your search above and press return to search.

ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை.. சென்னையில் பரிதாபம்.!

ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை.. சென்னையில் பரிதாபம்.!

ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை.. சென்னையில் பரிதாபம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Dec 2020 9:25 AM GMT

சென்னையில் ஆயுதப்படை போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சுரேஷ், இவர் சென்னை பெரியமேட்டில் உள்ள தனியார் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பெரியமேடு போலீசார் காவலர் சுரேஷின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட சுரேஷ், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் போலீசார் அவரது உறவினர்களிடமும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றது.

இதற்கு முன்னதாக ஆயுதப்படை காவலர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பனி சுமையும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது. இதனால் பணிச்சுமை காரணமாக சுரேஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணமாகவும் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News