Kathir News
Begin typing your search above and press return to search.

ரேசன் அரிசி கடத்தலை மடக்கிய அதிகாரிகள் மீது கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

ரேசன் அரிசி கடத்தலை மடக்கிய அதிகாரிகள் மீது கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

ThangaveluBy : Thangavelu

  |  26 March 2022 8:47 AM GMT

தேனி மாவட்டம், போடி மெட்டு பகுதியில் பறக்கும் படை துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை மறித்தபோது வாகனத்தை ஓட்டிவந்தவர் அதிகாரிகள் மீது மோத முயற்சித்தார். இதனை கவனித்த வருவாய்த்துறையினர் கொஞ்சம் தள்ளி சென்றனர். இதனால் அனைவரும் உயிர் தப்பினர்.

இதனையடுத்து அதிகாரிகள் மற்றொரு காரில் ஜீப்பை பின்தொடர்ந்து சென்றனர். இதனை கவனித்த கடத்தல்காரர் ஜீப்பில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதன் பின்னர் ஜீப்பை சோதனை செய்தபோது சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீப் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News