Kathir News
Begin typing your search above and press return to search.

சேலத்தில் பயங்கரம்: நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதியை கொல்ல முயற்சி!

சேலத்தில் பயங்கரம்: நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதியை கொல்ல முயற்சி!

ThangaveluBy : Thangavelu

  |  1 March 2022 6:44 AM GMT

சேலம் 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பொன்.பாண்டியன். இவரது அலுவலக உதவியாளராக இருப்பவர் பிரகாஷ். இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (மார்ச் 1) வழக்கம் போல சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நீதிபதி பொன்.பாண்டியன் வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த பிரகாஷ் நீதிபதியை கத்தால் குத்தி கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் தடுத்து பிரகாஷை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில் பிரகாஷ் இடமாறுதலுக்கு நீதிபதி பொன்.பாண்டியன்தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் நீதிபதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. பட்டப்பகலில் நீதிபதியை அரசு ஊழியரே கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News