Kathir News
Begin typing your search above and press return to search.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 5 காளைகளை அடக்கி தனியார் வங்கி ஊழியர் சாதனை.!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 5 காளைகளை அடக்கி தனியார் வங்கி ஊழியர் சாதனை.!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 5 காளைகளை அடக்கி தனியார் வங்கி ஊழியர் சாதனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jan 2021 11:46 AM GMT

தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இன்று மதுரை, அவனியாபுரத்தில் காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் போட்டி தொடங்கியது. இதில், 430 மாடுபிடி வீரர்கள் மற்றும் 830 காளைகள் களத்தில் உள்ளன.

இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக திருநாவுக்கரசு என்ற தனியார் வங்கி ஊழியர் ஒருவர் 5 காளைகளை இதுவரை அடக்கியுள்ளார். மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜல்லிக்கட்டில் 9 அடக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

அவரை போன்று மற்ற மாடுபிடி வீரர்களும் உற்சாகமுடன் காளைகளை அடக்கி வருகிறார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு அப்போதே பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News