Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும்: பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தில் 10% இடம் ஒதுக்கிடை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டு கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும்: பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Nov 2022 6:22 AM GMT

சென்னை தியாகராஜ நகரில் உள்ள தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் சின்னப்ப கணேசன் என்பவர் எழுதிய மோடியின் தமிழகம் என்று புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் அமைப்பு சாசன அமர்வு நீதிபதிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.


இதனை பா.ஜ.க மனதார வரவேற்கிறது. இந்த இட ஒதுக்கீட்டினால் ஓ.பி.சி/ எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் மலைவாழ் மக்களுக்கான உள் இட ஒதுக்கீடுகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. எனவே தி.மு.க அரசு கூட உடனடியாக இது குறித்து விஷம பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு இதனை தமிழகத்தில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.


தமிழகத்திலும் அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி என்று அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருப்பது எந்த குழப்பம் தவறும் இல்லை என்று அவர் கூறுகிறார். இப்போது பத்து சதவீத இட ஒலுக்கில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை தவிர்த்து இருப்பது. அரசியல சட்டத்தை மீறுகிறது, அரசியல் சட்டம் தடை செய்யப்பட்ட உக்குவிக்கிறது. 50% இட ஒதுக்கீடு உச்சவருமை அமைந்திருப்பது, மேலும் மீறல்களுக்கு வலியுறுத்து குறுக்கிட்டு செல்லும் என்று பல்வேறு எதிர்க்கட்சியினர் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Hindu News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News