Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாரான அண்ணாமலை - பூத் வாரியாக திட்டமிட்டு பயணம்!

எனது பூத், வலிமையான பூத் என்று திட்டத்தை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து இருக்கிறார்.

அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாரான அண்ணாமலை - பூத் வாரியாக திட்டமிட்டு பயணம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Nov 2022 3:18 AM GMT

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் மக்களை சென்று அவர்களின் குறைகளை நேரடியாக தீர்க்கும் முயற்சியில் பல்வேறு தலைவர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் மதுரை மாவட்டத்தில் தனது கட்சியை வலுப்படுத்த நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். குறிப்பாக இதுபற்றி அவர் பேசுகையில், "புதுப்பிக்கப்பட்ட மதுரை மாவட்ட அலுவலகத்தில் புத்துணர்வுடன் காத்திருந்த நமது மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


மேலும், மதுரை மாவட்டத்தில் நமது கட்சியை வலுப்படுத்த, மாநில பொதுச் செயலாளர் அவர்களின் முன்னிலையில் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிளை கமிட்டிகளை வலுப்படுத்த "எனது பூத், வலிமையான பூத்" என்ற புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்தோம்" என்று கூறியிருக்கிறார். மேலும் மதுரையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாக சென்று அவர்களுடைய குறைகளை கேட்டு வருகிறார். மேலும் மத்திய அரசு திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகளின் வீடுகளிலும் சென்ற நலம் விசாரித்து வருகிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள்.



மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, சாணம்பட்டியில் கிராம மக்களின் குறைகளை கேட்டறிவதற்காக அங்கு சென்றார் மேலும் அங்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த SC நலத்திட்டங்கள் பற்றி கேட்டறிந்தார். மேலும் திட்டங்களால் பயனடைந்த சகோதரர் ஒருவர் ஈஸ்வரன் இல்லத்தில் மதிய உணவு அருந்தி, அங்கிருந்து ஆலயம் மண்டபத்தில் கிராம மக்கள் மத்தியில் மத்திய அரசு திட்டங்களை பற்றி எடுத்துரைத்தார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள்.

Input & Image courtesy: https://twitter.com/annamalai_k/status/1590311361703481346?ref_src=twsrc%5Etfw

Next Story
கதிர் தொகுப்பு
Trending News