Kathir News
Begin typing your search above and press return to search.

ஹிட்லர் ஆட்சி நடத்துகிறார் முதல்வர்: பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் ஆவேசம்!

தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி நடத்துகிறார் மு க ஸ்டாலின் என்று பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் கருத்து.

ஹிட்லர் ஆட்சி நடத்துகிறார் முதல்வர்: பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் ஆவேசம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Nov 2022 11:23 AM GMT

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள புங்கம்பாக்கத்தில் சிறுபான்மையினர் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் இப்ராகிம் அவர்கள் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு உரையாற்றினார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஹிட்லர் ஆட்சி நடப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக மக்களை ஒரு கட்டிற்குள் வைத்து, காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி தி.மு.க அரசு செயல்படுவதாக குறிப்பிட்டார்.


தங்கள் கூட்டம் எங்கு கூட்டம் நடந்த வேண்டும்? என்று காவல்துறை தான் முடிவு செய்கின்றது. மேலும் நாங்கள் என்ன பேச வேண்டும்? என்று காவல்துறை தான் முடிவு செய்வதாகவும் வேலூர் இப்ராஹிம் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார். எனவே இது பற்றியான காவல்துறை செயல்கள் மூலம் தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடக்கவில்லை. ஹிட்லருடைய ஆட்சிகள் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையில் எத்தகைய ஹிட்லர் ஆட்சி மக்களை கஷ்டப்படுத்துகிறது?என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்.


எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியை போலீஸ் மூலம் இரும்பு கரம் கொண்டு அவர் அடக்குவதாகவும் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஜனநாயக முறையில் செயல்படும் பா.ஜ.க நிச்சயம் இவற்றை ஒருநாள் மாற்றும் என்று கூறுகிறார். பிரதமரின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் காவல்துறையை ஏவி தங்களை கைது செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். எத்தனை கைதுகள் செய்தாலும் நிச்சயம் பிரதமரின் திட்டங்கள் மக்களைக் கொண்டு போய் சேர்ப்போம் என்று வேலூர் இப்ராஹிம் அவர்கள் பேசி இருக்கிறார்.

Input & Image courtesy:Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News