Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் அதிக தொகுதிகளை பா.ஜ.க., கைப்பற்றும்.. மத்திய அமைச்சர் ஜவடேகர் நம்பிக்கை.!

தமிழகத்தில் அதிக தொகுதிகளை பா.ஜ.க., கைப்பற்றும்.. மத்திய அமைச்சர் ஜவடேகர் நம்பிக்கை.!

தமிழகத்தில் அதிக தொகுதிகளை பா.ஜ.க., கைப்பற்றும்.. மத்திய அமைச்சர் ஜவடேகர் நம்பிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Dec 2020 6:38 PM GMT

தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெறும் என நம்புகிறேன் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெறும் என நம்புகிறேன். மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் குடும்ப நலம் சார்ந்த கட்சிகள். பா.ஜ.க, மட்டும் மக்கள் நலன்சார்ந்த கட்சியாக உள்ளது.

நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கு வெற்றி அதிகரித்து வருகிறது. அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து வருகிறது. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒரு கூட்டணி என்று இருந்தால், அதில் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது மரபு. அதிமுக கூட்டணியில் மட்டுமின்றி, எந்த கூட்டணியாக இருந்தாலும் சார்ந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மறைமலை நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண் சட்டம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜவடேகர், வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரள மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. பஞ்சாப் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனக்கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News