திராவிட கட்சிகள் கூட்டணிக்கு அடுத்து தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த பா. ஜ.க!

By : Kathir Webdesk
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 12,838 ஆகும். இந்த வார்டுகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. திமுக-அதிமுக கூட்டணி கட்சிகள் வழக்கம் போல அதிக எண்ணிக்கையிலான இடங்களை கைப்பற்றினாலும், தமிழகத்தில் பாஜக தனக்கென ஒரு பிம்பத்தை நிலைநாட்டியதை உறுதி படுத்தும் வகையில், வெற்றியை பதிவு செய்து வருகிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின் படி, 2 நகராட்சி வார்டு உறுப்பினர், 24 பேரூராட்சி உறுப்பினர் இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. மண்டைக்காடு பேரூராட்சியை முழுவதுமாக கைப்பற்றியது. கீழ் குளம் பேரூராட்சியிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
